30 ஜூன், 2020 அன்றிலிருந்து இன்றுவரை மக்களிடம் அருகிவிடாமல் தொடர்வது காலையில் தினசரிகள் படிப்பது என்கிற பழக்கம். ஆனால், அதுவும் நம் தலைமுறையோடு முடிந்து போகுமோ என்ற கவலையும் இல்லாமல் இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், எங்கள் வீட்டிற்கு காலை ஏழு மணிக்குள் தினமலரோ, தினகரனோ காலத்திற்கேற்ப தினசரிகள் மாறியிருக்கலாம் தினம் வருவது நிற்கவில்லை. அப்பாவும் அம்மாவும் பக்கங்கள் திருப்பிப் படிக்கிற சத்தம் என்னை என்னவோ செய்யும். முழு செய்தித்தாளையும் ஒன்றுவிடாமல் புறட்டிப்பார்க்கிற எனது பசிக்கு […]
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
ஜூன் 22, 2020 கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிவாரணத்தை மாவட்ட வாரியாகப் பகுத்து வழங்கிட, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் […]
30 ஜூன், 2020 எந்த ஒரு மூவும் செய்யாதபடிக்கு, ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் கரோனா செக் வைத்துவிட்டது. பார்வையற்றோருக்கு சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற டபுல் செக் வேறு. நம் ஆட்கள்தான் சவாலை திவாலாக்கப் பிறவியெடுத்தவர்களாயிற்றே. விடுவார்களா? ஒருகை பார்ப்போம் என்று எல்லாக் களத்திலும் புகுந்து அடித்தார்கள். வங்கிக்களம் நுழைந்து, வறுமையில் வாடிய தன் சமூகத்தின் துயர் துடைத்தார்கள். அகில உலகிற்கே ஜூம் பயன்பாட்டைப் பரவலாக்கி, அறிவுக்களத்தில் சட்டம், சமூகம், இலக்கியம், இசை என இன்றுவரை விவாதித்து விழிப்புணர்வு பரப்பிக்கொண்டிருப்பவர்கள் […]
ஜூன் 21, 2020 கரோனா ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து அதுகுறித்த அரசாணை நேற்று, 20.ஜூன்.2020 வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ. 133 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியை மாவட்டவாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்று வழங்குவார்கள் எனவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான […]
20 ஜூன், 2020 தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 பேர் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பட்டியல் வழங்கியுள்ளார்.கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும், எனவே அவர்களுக்கு நிவாரணமாக […]
AICFB Zoom Meeting பார்வையற்றவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா?மறைக்கப்படும் தகவல்களை வெளிக்கொணர இயலுமா? இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, இன்று 20.06.2020 நண்பகல் 12.00 மணி அளவில்,“தகவல் அறியும் உரிமைச் சட்டம்பயன்பாடும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும்” என்ற தலைப்பில்அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறுஅகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.நாள் : […]
பார்வையற்றோர் ATM, Net Banking, cheque book, Loan வசதிகளைப் பெற இயலுமா? வங்கி கடன்களில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளதா?இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள ,19.06.2020 இன்று நண்பகல் 12.15 மணி அளவில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால், பார்வையற்றோருக்கான வங்கி சேவைகள் என்ற தலைப்பில்நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறு ஏஐசிஎஃப் பியின் அலுவலகம் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : […]
18 ஜூன், 2020 நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால், அனைத்து மாநிலங்களுக்குமான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைப் புத்தகம் ப்ரக்யாதா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உடல்நலம், பாதுகாப்பு போன்றவை தொடர்பான அறிவுரைகளும் அக்கறைகளும் பேசப்பட்டுள்ளன. அதேசமயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இணையவழி கற்றல் கற்பித்தல் குறித்து வெறுமனே ஐந்து வரையறைகளுடன் கடந்திருப்பது, மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் அக்கறைகொண்டோரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 20 பக்கங்களைக் […]
ஜூன் 18, 2020 நன்றி தி இந்து ஆங்கிலம்: குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் வலிப்பு மற்றும் கால்கை வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்தும் விகாபத்ரின் மாத்திரைகளுக்குத் தற்போதைய ஊரடங்கு காரணமாக, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைப் பத்திரிக்கை செய்திகளும் பல மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரும் உறுதிசெய்தனர். இதையடுத்து, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முயற்சியால், பல்துறை ஒத்துழைப்போடு, சுமார் எட்டு லட்சம் செலவில் 3400 விகாபத்ரின் மாத்திரைகள் தருவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு மற்றும் […]
ஜூன் 30, 2020 அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் அவர்களால் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 5000 கேட்டுப் போராடியவர்களுக்கு ரூ. 1000 என்பது போதாத தொகைதான் என்றாலும், முதல்வரின் இந்த அறிவிப்பை ஒரு துவக்கமாகவும், தங்களின் தொடர் வலியுறுத்தல்களுக்குக் கிடைத்திருக்கிற சிறிய வெற்றியாகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் கருதுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு […]
